2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டன.
வௌியான பெறுபேறுகளுக்கு அமைய தேசிய ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர் விபரம்
* கணிதப் பிரிவு – தனராஜ் சுந்தர்பவன் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி )
* கலைப்பிரிவு – சமல்கா செவ்மினி (தெஹிவளை Presbyterian மகளீர் கல்லூரி)
* வணிக பிரிவு – அமன்தி மதநாயக்க ( காலி சங்கமித்தா மகளீர் பாடசாலை)
* பயோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் – சுகிகா சந்தசரா ( ஹொரணை தக்ஷிலா கல்லூரி)
* பொறியியல் தொழில்நுட்பம் – அவிஷ்க சானுக (ஹொரணை தக்ஷிலா கல்லூரி)
ஆகிய மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.
பரீட்சை பெறுபேறு மீள் மதிப்பீட்டிற்காக இணைய வழியின் ஊடாக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

