எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் முறைப்பாடுகளை தாக்கல் செய்ய வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவரது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதற்கமைய இந்த விடயங்களில் தலையிடப் போவதில்லை என ஜனாதிபதி சற்று முன்னர் சபாநாயகரிடம் அறிவித்தார் என இரகசிய செய்தி மூலங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

