29.5 C
Colombo
Friday, August 21, 2026

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இளவாலை பொலிஸாரால் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் இளைஞன் ஒருவர் இளவாலை பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பனிப்புலம் அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது இளைஞனிடம் இருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞனை இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles