புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர். காங்கேசன்துறை நல்லிணக்கப்புரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
காங்கேசன்துறை கடற்படையினர் வழங்கிய தகவல் அடிப்படையில்
பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சந்தேக நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

