ரிஷாட் பதியுதீன் எம்பி வீட்டில் பணிபுரிந்த நிலையில் மர்மமாக மரணித்த ஹிஷாலினிக்கு நீதி கோரி, நுவரெலியா – கொட்டகலை, திம்புள்ள பகுதி தோட்டத்தில் இன்று (27) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திம்புள்ள தோட்ட மக்களினால் இந்தப்போராட்டம் தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக நடத்தப்பட்டது.

