அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் இன்று (12) அல்லது அடுத்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகள், சிவில் ஆர்வலர்கள், ஊடக அமைப்புகள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகம் கடுமையாக விமர்சித்தது.

