வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்டோருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் இன்று (25) திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரெலோவின் செயலாளரான மட்டக்களப்பு மாவட்ட எம்பி கோவிந்தன் கருணாகரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வினோனோதராதலிங்கம் எம்பி, ரெலோவின் உப தலைவர், இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

(குகதர்சன்)

