அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.
இன்று (31) இடம்பெற்ற வழக்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சில வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

