காணொளியாக பார்க்க……
https://fb.watch/p1gxQbg2rM/?mibextid=RtaFA8
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி உரிமையாளர் இந்திரகுமார் பத்மநாதனும் உடனிருந்தார்.
நொர்தேன் யுனி தனியார் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 21ஆம் திகதி நடைபெறவிருந்த இசை நிகழ்வு யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

