கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்த நிலையில், அவர்களில் 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

