திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இன்று நடத்த தடை விதித்து திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டான் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரதேசம் ஆகிய இடங்களில் திலீபனின் நினைவு தின கொண்டாட்டங்கள், அணிவகுப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸாரால் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

