27.8 C
Colombo
Friday, August 21, 2026

அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி யாழில் ஆரம்பம்

அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.

அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி இன்று மதியம் 01 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.

நல்லூரில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டவர்களும் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும்.

காணொளியாக பார்க்க..https://fb.watch/jXtvRGHjSJ/?mibextid=RUbZ1f

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles