29.5 C
Colombo
Friday, August 21, 2026

கொக்குவிலில் 17 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொக்குவிலில் பகுதியில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்னழுத்தியினை பயன்படுத்திய வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles