மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் உள்ள அரசகாணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி குறித்த அரச காணியில் ஐம்பதிற்கு மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

