மன்னார் மாவட்டத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய் வழங்கிவைத்தார்.
இன்று புதன்கிழமை (28) காலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இவ் விநியோக நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் புத்தாண்டுக்கு முன்னதாக இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு 150,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள 7,000 உலர் உணவுப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கவுள்ளது.

