தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காரி கெர்ஸ்டன் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சிவிப்பாளராக செயற்படவுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் 2 வருடங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை தயார்ப்படுத்துவது அவரின் பிரதான பொறுப்பாக உள்ளது.
காரி கெர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு பிரதான பயிற்விப்பாளராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

