தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக திரு. பிரமோத்யா விக்ரமசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திரு. இந்திக டி சேரம், திரு. தரங்க பரணவிதான, திரு. வினோதன் ஜோன் மற்றும் திருமதி. ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39-1 பிரிவின்படியும் மற்றும் 2025 மே 21 ஆம் திகதிய 2437/24 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின்படியும் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

