உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று இந்தியாவின் அகமதாபாதில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
சா்வதேச கிரிக்கெட் சபை சாா்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவா்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.
கடந்த 2019-இல் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அவுஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, மே.இந்திய தீவுகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் தலா 1 முறையும் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.
ஏற்கெனவே 1987, 1996, 2011-இல் வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய நிலையில், 13-ஆவது போட்டியை தன்னந்தனியாக நடத்துகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதா்லாந்து, நியூஸிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டியில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள், 3 நாக் அவுட் என மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
முதல் ஆட்டம் நடைபெறும் அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நவ. 19-இல் இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.
மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, புணே, தா்மசாலா, கொல்கத்தா, லக்னௌ, டில்லி உள்ளிட்ட 10 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பகல் நேர ஆட்டங்கள் காலை 10.30 மணிக்கும், பகலிரவு ஆட்டங்கள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கி நடைபெறும். மொத்தம் 6 ஆட்டங்களில் பகலில் நடைபெறுகின்றன. இதர ஆட்டங்கள் பகலிரவு ஆட்டங்களாகும்.

