28.9 C
Colombo
Friday, August 21, 2026

திருமணங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகள் சம்பந்தப்பட்ட திருமணங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவைப்படும் புதிய அரசாங்க விதிமுறைகள் தொடர்பாக சட்டத்தரணி திஷ்யா வெரகொட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கையில் ஒரு வெளிநாட்டவரின் திருமணத்தை பதிவு செய்வதற்கு சில முன்நிபந்தனைகளை விதிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், புதிய முன்நிபந்தனைகள் சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது, அபத்தமானது, அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் மனித உரிமைகள் ஆணையத்தை முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கூறப்படும் சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு திஷ்யா வேரகொட மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மேலும் கோரியுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles