நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் பங்கேற்ற கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
இன்று மாலை 3 மணியளவில் சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் “தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு” என்ற தலைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றதுடன் சமகால அரசியல் களத்தில் கருத்து தெரிவித்தனர்.

