விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அதன்படி, தற்போதைய விலையில் இருந்து மேலும் 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

