வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா – 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி என்ற 32 வயதுடைய மனைவியும், பிள்ளைகளான டனிஸ்கா வயது 5, கனிஸ்கா வயது 4 ஆகியோரையும் 10ம் திகதியிலிருந்து காணவில்லை என்றே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

