நேற்று (4) கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேரையும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துவதற்காக கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு சற்றுமுன் பொலிஸார் அழைத்து சென்றுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டால் இந்த பதற்ற நிலை உருவாகியுள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதால் 44 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

