படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (1) நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிந்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது.
யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சன் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

