கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
அதன் காரணமாக கடந்த ஒருவாரமாக கோரிக்கை முன்வைத்து நடத்திவருகின்ற பணிபகிஷ்கரிப்பை மேலும் தொடரப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக
இணையவழிக் கற்றலை ஆசிரியர் சங்கங்கள் புறக்கணித்துவரும் நிலையில் அது தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

