ஜயந்த கெட்டகொடவின் ராஜினாமாவால் காலியாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நிலையிலேயே காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வகையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

