29.5 C
Colombo
Friday, August 21, 2026

பகுதியளவில் இடிந்து விழுந்தது நல்லூர் மந்திரிமனை!

யாழ்ப்பாணத்தில் தீடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் மந்திரிமனை பகுதியளவில் இன்று இடிந்து விழுந்தது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அது இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான விதத்தில் காணப்படுகின்றது எனவும் அதனை பேணிப் பாதுகாக்க பல தரப்பும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த முயற்சி சாத்தியமாகவில்லை.

இந்நிலையில் இன்று தீடீரென காற்றுடன் ஏற்பட்ட மழை காரணமாக நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

குறித்த சம்பவத்தையடுத்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles