பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் ஆரம்பத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அவர் பரிந்துரைக்கப்பட்டார்.இந்த யோசனையை அமைச்சர் விஜித ஹேரத் வழி மொழிந்தார்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10.00 மணியளவில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

