ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர அறிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, வினாத் தாளில் இருந்து மூன்று கேள்விகள் கசிந்ததை விசாரணைகள் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்த மூன்று கேள்விகளுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என்றும், அதற்கேற்ப விடைத்தாள்களின் மதிப்பீடு தொடரும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

