எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று (6) தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சட்டத்தரணி சுனில் வத்தகல ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தை சமர்ப்பித்தனர்.
இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில் நேற்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

