சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் சூடு பிடித்துவரும் நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

