27.8 C
Colombo
Friday, August 21, 2026

கடல் கொந்தளிப்பு முன்னெச்சரிக்கை – நெடுந்தீவு போக்குவரத்து நாளை இடம்பெறாது!

கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் – நெடுந்தீவு கடற்போக்குவரத்து நாளையதினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல திணைக்கள காலநிலை அறிக்கை பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை (24)கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு 

அனலைதீவு மற்றும் எழுவைதீவு கடல் போக்குவரத்தும் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles