மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிவரும் ஜானக வக்கும்புரவுக்கு மேலதிகமாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல பதவி வகித்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்.

