அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் மீன் தொட்டிக்குள் விஷவாயுவை சுவாசித்ததில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார்.
விஷ வாயுவை சுவாசித்த 08 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

