இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று(20) கொழும்பை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த பிறகு, அவர் இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்பார்.
இதுவரை காலமும் இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை பெல்ஜியம் நாட்டின் இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய சந்தோஷ் ஜா இலங்கை உயர்ஸ்தானிகராக இந்திய வெளிவிவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

