27.8 C
Colombo
Friday, August 21, 2026

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (13) புதன்கிழமை காலை நடைபெற்றது.

காலை 6.15 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

நாளைய தினம் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவமும் மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

காணொளியாக பார்க்க…https://fb.watch/n0URHB_Dk2/?mibextid=6aamW6

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles