வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (13) புதன்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6.15 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.
நாளைய தினம் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவமும் மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
காணொளியாக பார்க்க…https://fb.watch/n0URHB_Dk2/?mibextid=6aamW6


