அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. எனவே, இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“நாட்டைச் சுற்றியுள்ள மற்றும் கடற்கரையோரம் வசிப்பவர்கள் இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பான சமீபத்திய தகவல்கள் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்போது அது வெளியிடப்படுமென தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. எனவே, இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.

