08 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 02 சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நேற்று (12) அதிகாலையில் கல்பிட்டி வன்னிமுண்டலம தடாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்த முயன்ற சுமார் 08 கிலோ 450 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் 02 சந்தேக நபர்கள் மற்றும் இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று தடாகத்தில் இருந்து கல்பிட்டி கடற்பகுதியை நோக்கி வேகமாகச் சென்றதைக் கண்டறிந்த கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் டிங்கியை இடைமறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது, டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 பொதிகளில் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 08 கிலோ 450 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களும், குறித்த செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி மண்டலக்குடாவில் வசிப்பவர்கள், 37 மற்றும் 42 வயதுடையவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கம் மற்றும் டிங்கியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

