இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (09) மாலை நடைபெற்றது.
இதன்போது அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இன்றும் (10), நாளையும் (11) இந்த கலந்துரையாடலை தொடர இணங்கப்பட்டுள்ளது.

