ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாளை சனிக்கிழமை(11) யாழ்ப்பாண கலாசார நிலைய கையேற்பு, வடக்கின் ஜந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்தி பங்கேறுபுடனான சுதந்திர தின நிகழ்வு, இசை நிகழ்ச்சி என்பனவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கலந்துரையாடல நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் இடம்பெற்றது.

