தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு எரிபொருள் சலுகை வழங்குவது குறித்து அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் பரிசீலிக்கும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
இதனை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜூன் 14 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமைச்சர்கள் குறிப்பாக மீன்வளத் துறைக்கு சலுகை வழங்குவது குறித்து விவாதித்தனர். எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு ஒரு கூட்டு முடிவு. எவ்வாறாயினும், எங்கள் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இந்த முடிவைப் பற்றி வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், “என்று அவர் கூறினார்.
தற்போது, எரிபொருள் விலை உயர்வை அடுத்து, போக்குவரத்து, மீன்வளம் மற்றும் மின் மற்றும் எரிசக்தி துறையினரால் கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

